அல்ஃபுர்கான் சூளைமேடு அசோசியேஷன்னுக்கு கீல் செயல்பட்டு வரும் அர்ரஹ்மான் பைதுல் மால் கடந்த இரண்டு வருட காலமாக சிறப்பாக இயங்கி வருகிறது. அதன் முன்றாம் ஆண்டு துவக்க விழா அல்புர்கான் ஜுமுஆ பள்ளி வாசலில் கடந்த 16.12.2012
அன்று நடந்தது. அல்ஹம்துலில்லாஹ் இந்த விழாவில் முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் முஹமது மொய்தீன் அவர்களும் அல்முஹ்மின் அறகட்டளை நிர்வாகி சகோதரர் செங்கிஸ்கான் அ வர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். அல் ஃபுர்கான் ஜுமுஆ பள்ளிவாசல் செயலாளர் சகோதரர் இபுராஹீம் அவர்கள் நிறைவுரை ஆற்றி அல்லாஹ்வின் கிருபையால் அர்ரஹ்மான் பைதுல் மால் முன்றாம் ஆண்டு துவக்க விழ இனிதே நிறைவுற்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த விழாவின் புகைப்படங்கள் நமது இணையதளத்தில் வெளியிட படும்.